சூதாடிய 4 பேர் கைது

ஈரோடு, ஜன. 20:  ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாண்டாம்பாளையம் சுடுகாடு அருகே சிலர் கும்பலாக அமர்ந்து காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தாண்டாம்பாளையம் கீழ்வீதியைச் சேர்ந்த ரங்கசாமி (40), சடையப்ப நகரைச் சேர்ந்த முருகன் (30), பழனிச்சாமி (46), மணிகண்டன் (31) என தெரிய வந்தது.

Related Stories: