வேலூர், ஜன.20: வேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாடகை வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே கருகம்பத்தூர் அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அதே தெருவைச் சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், கோபி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியிடம் வாடகை பணத்தை கேட்டாராம். அப்போது சுமதி இரண்டு நாட்களில் வாடகை பணத்தை கொடுப்பதாக கூறினாராம். அதனை ஏற்க மறுத்த கோபி, சுமதியை அவதூறாக பேசினாராம்.