வேலூர், ஜன.20: வேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் காளைவிடும் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், காளை விடும் விழாவில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிடவும், தமிழ்நாடு மிருகவதை தடுப்பு விதிகள் 2017-ன்படி, அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை முன்னரே நடுநிலை தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காளைவிடும் விழாவிற்கான முடிவு அறிக்கையை பெற்று சமர்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.