வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்

வேலூர், ஜன. 20: வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மகன் சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் விருப்பாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா(45). இவரது மகன் கோகுல்(22). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் லத்தேரியில் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கோகுல், தனது தாயார் சுகன்யாவை பைக்கில் அழைத்துக்கொண்டு லத்தேரியில் உள்ள விவசாய நிலத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேண்பாக்கம் தனியார் நீச்சல்குளம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் சென்றபோது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுகன்யா, கார் டயரில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். கோகுல் படுகாயமடைந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கோகுலை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: