×

திருவண்ணாமலை மாவட்ட வீரர்கள் தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் சாதனை

செய்யாறு, ஜன.20: தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 40வது தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்தது. இதில் 24 மாநிலங்களை சேர்ந்த சுமார் 1,500 வீரர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 27 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் 30 வயது பிரிவில் ஆர்.சரளா சங்கிலி குண்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். எம்.பாலாஜி குண்டு எறிதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலம், சங்கிலி குண்டு எறிதலில் வெண்கலம், எம்.அன்பழகன் வட்டு எறிதலில் வெண்கலம், ஆர்.திருமலை கோகுலன் 5 கிலோ மீட்டர் வேக நடைப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

இதேபோல், 35 வயது பிரிவில் என்.ராஜேஸ் குண்டு எறிதல் தங்கம், எ.சத்தீஷ்குமார் ஈட்டி எறிதலில் வெள்ளி, சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளி, என்.கல்பனா சங்கிலி குண்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் பெற்றனர். சாதனை படைத்த வீரர்களுக்கு தமிழ்நாடு மாஸ்டர் அத்லெடிக்ஸ் அமைப்பின் செயலாளர் ராமமூர்த்தி சான்றிதழ் வழங்கினார்.

Tags : Thiruvannamalai District Athletes At National Level Senior Athletic Championships ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...