தூத்துக்குடி, ஜன.20: தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் காயல்பட்டினத்தில், மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் ஹஸன் சைபுதீன் வரவேற்றார். கூட்டத்தில், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் ‘குடியுரிமை சட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.