பாப்பாக்குடி, ஜன. 20: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் முக்கூடலில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தினர். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி வேளான் மரபினராக அறிவிக்கக் கோரி இக்கட்சியினர் மக்கள் கடந்த 69 தினங்களாக கட்சியின் மாநிலத் தலைவர் ஜான் பாண்டியன் அறிவிப்பு படி கருப்புச்சட்டை அணிந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமமுகவினர் மேற்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் முக்கூடலில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தினர்.
இதில் திரளானோர் பங்கேற்றனர்.