கடையநல்லூர், ஜன. 20: கடையநல்லூரில் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் நிறுவனர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். எவரஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி துறைத்தலைவர் செந்தூர் பாண்டியன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் வாழ்த்திப் பேசினார். அரசு மற்றும் பல முன்னணி தனியார் கம்பெனிகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் இக்கல்லூரியில் பயின்று கவுன்சலிங் வழியாக அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்துவருவோர், தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.