சேலத்தில் விதிமுறையை மீறிய 262 வாகனங்களுக்கு ₹8.66 லட்சம் அபராதம்

சேலம், ஜன. 20:சேலத்தில் விதிமுறையை மீறி இயக்கிய 262 வாகனங்களுக்கு ₹8.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் கிழக்கு, மேற்கு, ஓமலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை, குகை, 5 ரோடு, அழகாபுரம், அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் உள்ளதா? என்றும், விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சேலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறையை மீறி இயக்கிய 262 வாகனங்களுக்கு ₹8.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மேற்கு, கிழக்கு மற்றும் ஓமலூரில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை  இயக்கியவர்களிடம் ₹8.66லட்சம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் போதையில் வாகன ஓட்டியது, அதிக பாரம் ஏற்றி சென்றது என மொத்தம் 2224 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வாகன தணிக்கை நடத்தப்படும்,’ என்றனர்.

Related Stories: