இடைப்பாடி, ஜன.20: விடுமுறை தினத்தையொட்டி பூலாம்பட்டி காவிரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின்கதவனை வழியாக காவிரி பவானி, திருச்சி, தஞ்சாவூருக்கு செல்கிறது. பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டையில் தண்ணீர் தேக்கி வைக்கபடுவதால் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் நிறைந்திருக்கும். இங்கிருந்து பள்ளிபாளையம், ஈரோடு பகுதிக்கு விசைப்படகு இயக்கப்படுகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் விசைப்படகில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு களித்தனர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 4000 கனஅடியாக குறைக்கப்பட்டதால், மூலப்பாறையில் இருந்து கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை செல்லும் பகுதிகளில் பாறை திட்டுகள் வெளியே தெரிகிறது. ேமலும் மீனவர்கள் மீன்களை பிடிக்க முகாமிட்டுள்ளனர்.