×

ஆத்தூர், இளம்பிள்ளையில் நடிகர் ரஜினி மீது அவதூறு புகார்

ஆத்தூர், ஜன.20:  சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரை பற்ற அவதூறான தகவலை கூறிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் கணபதி, விமலா, பொருளாளர் ஸ்ரீராமுலு மற்றும் கழக நிர்வாகிகள் முத்து, மணி சம்பத் ஆகியோர் நேற்று ஆத்தூர் நகர போலீசில் புகார் மனு அளித்தனர். அதே போல் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில், திராவிட விடுதலை கழகத்தின் சார்பில், ரஜினி மீது இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழக நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் தனசேகரன், மோகன்ராஜ், மணிகண்டன், தங்கராஜ், கிருஷ்ணன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

Tags : Sukumari ,Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...