×

பொங்கல் விடுமுறை முடிந்தது கிருஷ்ணகிரி டோல்கேட்டில் அணிவகுத்த வாகனங்கள்

கிருஷ்ணகிரி, ஜன.20: பொங்கல் பண்டிகை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பியதால், கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நேற்று மாலை 1 கி.மீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி ஓசூர் மற்றும் பெங்களூரில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்கு கடந்த 13, 14ம் தேதிகளில் சென்றனர். பின்னர் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அனைவரும் தங்கள் பணிக்கு செல்ல கார், பஸ், வேன்களில் திரும்பி கொண்டிருந்தனர். தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதிக்கு திரும்பினர். நேற்று அனைவரும் ஒட்டு மொத்தமாக பணியிடங்களுக்கு திரும்பியதால் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அதில் பயணம் செய்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.

Tags : holidays ,Pongal ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...