×

அதிகாரிகள் அலட்சியம் பொங்கல் விளையாட்டு போட்டியில் தகராறு இருவரை உருட்டு கட்டையால் தாக்கிய 5 பேருக்கு வலை

மன்னார்குடி, ஜன. 20: மன்னார்குடி அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறில் இருவரை உருட்டு கட்டையால் தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் சிங்கங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் அங்குள்ள பிள்ளையார் கோயில் திடலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மன்னார்குடி கேபிஎஸ் நகரை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், சிங்கன்குளம் பகுதியை சேர்ந்த தர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் தனது நண்பர்களான அசேஷம் பகுதியை சேர்ந்த சுந்தர், தனியரசு, சிங்கன்குளம் பகுதியை சேர்ந்த மணி, பிரகாஷ் ஆகியோருடன் வந்து மோகன் (46), லட்சுமணன் (33) ஆகியோரை சரமாரி உருட்டு கட்டையால் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்தனர். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தாக்குதலில் காயமடைந்த மோகன் மன்னார்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags : men ,game ,Pongal ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்