×

குடியுரிமை திருத்த சட்ட குழப்பம், தெளிவு கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, ஜன.20: சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பாக தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குழப்பமும் தெளிவும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் திருத்துறைப்பூணடியில் நடைபெற்றது.
தைக்கால் பள்ளி தலைவர் முகம்மது யாசீன் தலைமை வகித்தார். மதிமுக நகர செயலாளர் கோவி சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பேராசிரியர் மார்க்ஸ், தியாகு ஆகியோர் பேசினர். இதில் திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, நாச்சிக்குளம், கடியாச்சேரி உள்ளிட்ட ஜமாத்தார்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். முன்னதாகஅமைப்பு செயலாளர் வழக்கறிஞர் கந்தசாமி வரவேற்றார் முடிவில் மணலி அப்துல் காதர் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு