×

தஞ்சை மாவட்டத்தில் அறநிலையத்துறை கோயில்களில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, ஜன.20: தஞ்சை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரத்திற்குட்பட்ட ஆலயங்களில் சுமார் 100 இரவு காவல் பணி இடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு உடற்திறன் உள்ள 62 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சிறப்பு காவலர்களாக பணி நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமனம் செய்வோருக்கு மாதம் ரூ.7300 தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட பணிக்கு தகுதியான விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உடனே தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு துறையில் பணியாற்றியதற்கான சான்றுகளுடன் நேரில் தேர்விற்கு அலுவலக நாட்களில் கலந்து கொள்ளும்படி எஸ்.பி.அலுவலக செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : temples ,Thanjavur district ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு