×

வேதாரண்யத்தில் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு

வேதாரண்யம், ஜன.20: வேதாரண்யத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.00 மணிவரை 20.6 மிமி மழை பெய்துள்ளது. தொடர்ந்து மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் சம்பாநெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. நெல்மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சீசன் முடிந்து உப்பு உற்பத்தி துவங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள்நடைபெற்று வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...