இடம் கொடுக்குமா கோயில் நிர்வாகம்? மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

திண்டுக்கல், ஜன. 20:  மாநில அளவிலான சிலம்பாட்ட குழு போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல்  எஸ்.வி.எம் சிலம்பாட்டம் தற்காப்பு கலை அகாடமி சார்பில் மாநில அளவிலான  சிலம்பாட்ட குழு போட்டி நடைபெற்றது. இதில் கத்தி, வால், மான் கொம்பு,  சுருள் வால், தீப்பந்தம், தொடுதிறன், இரட்டை குச்சி, நடுக்கம்பு, ஈட்டி  உள்ளிட்ட குழு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் திண்டுக்கல், திருச்சி,  நெல்லை, தென்காசி, எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5  வயது முதல் 60 வயது வரை பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  மற்றும் மெடல்களும் மேலும் குழு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரேவதி  நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி  பாண்டித்துரை, சட்ட ஆலோசகர் பெருமாள், அகாடமி தலைவர் முருகபாண்டியன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: