×

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 15,635 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி

தரங்கம்பாடி, ஜன.20: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் 15,635 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 141 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 15,635 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிநடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு அருண்பிரசாத் உள்பட மருத்துவ அலுவலர்கள் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டுமருந்து முகாமில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் லேனா உடனிருந்தார்.

Tags : children ,Sembanarko Region ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...