×

கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை கந்தூரி விழாவில் 12 ஆயிரம் பேருக்கு பிரியாணி

திண்டுக்கல், ஜன. 20: திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் 12 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் நாகல்நகர் ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் ஜங்சன் பள்ளிவாசல் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ரசூலுல்லா கந்தூரி விழா வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கந்தூரி விழா நாகல்நகர் பள்ளிவாசலில் நடைபெற்றது. முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து 12 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் அகமது புகாரி தலைமை வகித்தார். செயலாளர் அலாவுதீன், பொருளாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை தலைவர் தாலிப், துணை செயலாளர் ஜங்கிள், நிர்வாக குழு உறுப்பினர்கள் பசீர் அகமது, ஜமால் முகமது, பிச்சை முகமது, சௌக்கத்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...