×

கரூர் அரசு காலனியில் மந்தகதியில் நடந்து வரும் பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜன. 20: கரூர் அரசு காலனி அருகே கரியாழி நகர் மற்றும் வாங்கல் சாலை செல்லும் சாலையில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் அரசு காலனி பகுதியில் இருந்து நெரூர் செல்லும் சாலையோரம் கரியாழி நகர், தங்கராசு நகர், வாங்கல் செல்லும் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான சாலைப்பகுதி உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கல், கரூர், வாங்கப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக, சாலையின் மையத்தில் மினி பாலம் அமைக்கும் வகையில் சாலைப்பகுதி அடைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பாலப்பணி மந்தமாக நடைபெறுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் மாற்று வழியில் சென்று வருகின்றனர். எனவே இந்த பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...