×

தோகைமலையில் விவசாயிகள் சங்க தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி

தோகைமலை, ஜன. 20: கரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன், நாவலன் ஆகிய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த இந்நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சங்கப்பிள்ளை, ஒன்றிய தலைவர் ரெத்தினம், பொருளாளர் முனியப்பன், நிர்வாகி அரிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விவசாய சங்கத்தின் மாநில துணை தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் இலக்குவன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தில் உயிர்நீத்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன், நாவலன் ஆகிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி அவர்களது போராட்டங்கள், அவர்கள் உயிர்நீத்த நிகழ்வுகள் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சக்திவேல், வடிவேல், பாப்பாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Farmers 'Union Martyrs' Memorial Event ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு