கள்ளக்குறிச்சி, ஜன. 20: கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். அந்த கிராம ஏரியில் தண்ணீர் உள்ளது. இதனால் இந்த கிராம பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணற்றில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் போதுமான அளவில் உள்ளது. இந்நிலையில் தண்டலை கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் மூலம் தெரு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பைப்லைன் மூலம் தண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பல இடங்களில் பைப்லைனில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் குடிநீர் மின்மோட்டார் பழுதாகியதால் கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.