வாலிபரை மிரட்டி ரூ.2 ஆயிரம் பறிப்பு

நாங்குநேரி, ஜன.19: நாங்குநேரியில் வாலிபரை மிரட்டி ரூ.2ஆயிரத்தை பறித்துச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.நாங்குநேரி பெரியகோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(40). இவர் தனது நண்பர் முத்து என்பவருடன் நாங்குநேரியில் இருந்து களக்காட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். நாங்குநேரி விஏஓ அலுவலகம் அருகே காரை நிறுத்திய பிரேம்குமார், சாலையோரம் நின்று போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சாமித்துரை என்பவர் அரிவாளால் மிரட்டியதோடு பிரேம்குமாரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நாங்குநேரி  எஸ்.ஐ. முத்துராஜ், பணத்தை பறித்துச்சென்ற சாமித்துரையை தேடி வருகிறார்.

Related Stories: