×

நெல்லையில் திடீர் சாரல் மழை

நெல்லை, ஜன. 19: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று திடீர் சாரல்மழை பெ்ய்தது.நெல்லை மாவட்டத்தில் டிச.31ம் ேததியுடன் வடகிழக்கு பருவமழைக் காலம் முடிவடைந்தது. ஜனவரி மாதம் துவங்கியது முதல் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வாரமாக அதிகாலையில் பனிப்பொழிவும் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று நெல்லை தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதிகாலை பனிப்பொழிவு இல்லை. காலை முதல் மேகமூட்டமாகவும் மந்தமான ெவயிலும் இருந்தது. பகல் 12 மணிக்கு நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. பின்னர் வழக்கம் போல் வெயில் அடித்தது. இதே போல் நெல்லை, தென்காசி மாவட்ட பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி