சங்கரன்கோவில். ஜன.19: பிரதமரின் தேர்வு குறித்த மாணவ, மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவியர் கட்டுரை போட்டிகள் வைத்து தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து 66 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகள் மோ னிஷா, குருலட்சுமி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 17ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். இவர்கள் டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடுகின்றனர்.