வீரவநல்லூர், ஜன. 19: சேரன்மகாதேவியில் பால் வியாபாரியை சரமாரியாக வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேரன்மகாதேவி மேல தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் குமார் என்ற அம்பலம் (36). பால் வியாபாரியான இவர், நேற்று மாலை பால் கொண்டுசென்ற போது ராமர் கோயில் தென்புறம் 4பேர், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.