×

தொழிலாளி தற்கொலை

தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம்  அருகே உள்ள குமாரப்பெருமாள் விளையை சேர்ந்தவர் வில்சன்( 66). கட்டிட  தொழிலாளி. இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் வீட்டின்  முன்பு  சொந்தமாக பலசரக்கு கடை நடத்தி வருகிறார்கள். வில்சன் மது  அருந்திவிட்டு    வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு  வந்தாக தெரிகிறது. இதனை அவரது மனைவி  மற்றும் மகன்கள் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  வில்சன் வீட்டின் அருகில் விஷம் குடித்த  நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக  நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார்.

Tags : Worker suicide ,
× RELATED தொழிலாளி தற்கொலை