நித்திரவிளை: கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோபின்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும் பக்கத்து ஊரான கல்லுபொற்றையை சேர்ந்த ரெதீஷ்(28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜோபின் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் கல்லுபொற்றையில் உள்ள ஒரு வீட்டிற்கு பொருள் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரெதீஷ், ஜோபினை தாக்கியுள்ளார். இதில் ஜோபின் பல் உடைந்தது. மேலும் ஜோபின் சென்ற பைக்கையும் உடைத்து, அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த ஜோபின் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.