×

சுரைக்காய் வரத்து அதிகரிப்பு

திருப்பூர், ஜன. 19:  திருப்பூர் தென்னம்பாளையம் மொத்த மார்க்கெட்டுக்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து 15 கிலோ எடையுள்ள சுரைக்காய் ரூ.60க்கு விற்கப்படுகிறது. திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை, தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. திருப்பூர், கோயில் வழி, அருள்புரம், நல்லூர், செவந்தபாளையம், அல்லாலபுரம், நொச்சிபாளையம், மங்கலம், அணைப்பாளையம், முதலிபாளையம் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களிலுள்ள காய்கறிகளை அறுவடை செய்து திருப்பூர் உழவர் சந்தை, மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். திருப்பூர் மாநகர், மங்கலம், அவிநாசி, பல்லடம், நல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர், காய்கறி கடை உள்ளிட்ட சிறு வியாபாரிகள் தென்னம்பாளையம் மொத்த சந்தையில் காய்கறிகளை வாங்கி கிராமங்களில் சில்லரை விற்பனை செய்கின்றனர். மொத்த காய்கறி சந்தைக்கு தினமும் 800 டன் முதல் ஆயிரத்து 200 டன் காய்கறிகள் வரத்து உள்ளது.  

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலைபடிப்டியாக குறைந்து வருகிறது. 15 கிலோ எடையுள்ள சுரைக்காய் ரூ.60க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.4க்கு விற்கப்படுகிறது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு