×

உழவர் சந்தை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

திருப்பூர், ஜன. 19:  திருப்பூர், தெற்கு உழவர் சந்தை சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள்    வரையப்பட்டு உள்ளது. திருப்பூர், பல்லடம் ரோடு பகுதியில் தெற்கு உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவர் சந்தை வளாகத்தினுள் ஏராளமான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.மேலும், உழவர் சந்தை வெளிபுறமும் ஏராளமான கடைகள் உள்ளது. இந்நிலையில், உழவர் சந்தையை சுற்றி மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொது வெளியில் இயற்கை உபாதை கழிப்பது, அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டுவது போன்ற பொதுசுகாதாரத்திற்கு கேடு ஏற்படுத்தும் செயல்கள் நடந்து வருகிறது.

இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெற்கு உழவர் சந்தையின் சுற்று சுவரில் சுகாதாரம் பேன வேண்டும், பொதுவெளியில் இயற்கை உபாதைகள் கழிக்க கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு