×

அதிக ஒளி கொண்ட எல்.இ.டி விளக்குகளை பொருத்திய 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை, ஜன.19:  அதிக ஒளி கொண்ட எல்.இ.டி விளக்குகளை பொருத்தி இயக்கிய 8 இருச்சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாநகர பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கண் கூசும் வகையில் முகப்பு விளக்குகளை பொருத்தி இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று இயக்கப்படும் இருசக்கர வாகங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதன்படி கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்களை கூசும் வகையில் முகப்பு விளக்குகளை பொருத்தி இயக்கியவாறு வந்த 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்