ஈரோடு, ஜன.19: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் மாதவக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36). தொழிலாளி. இவர், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாக்கியலட்சுமி, மணிகண்டனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 16ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பாக்கியலட்சுமி, வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.