கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு காதல் மனைவி தற்கொலை

ஈரோடு, ஜன.19:  ஈரோடு கிருஷ்ணம்பாளையம் மாதவக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36). தொழிலாளி. இவர், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாக்கியலட்சுமி, மணிகண்டனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 16ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பாக்கியலட்சுமி, வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாக்கியலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: