×

ஏஐடியூசி தொழிற்சங்க கொடியேற்று விழா

பவானி, ஜன.19:  பவானியில் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சார்பில் ஜீவாவின் 57ம் ஆண்டு நினைவு நாள் கொடியேற்று விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், குமார், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் சித்தையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஏஐடியூசி தலைவர் சந்திரசேகர், சிபிஐ நகரச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கந்தசாமி, வட்டாரப் பொருளாளர் நஞ்சப்பன், நிர்வாகிகள் ஆறுமுகம், கோபால், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பவானி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அந்தியூர் பிரிவு உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது.

Tags : AITUC Trade Union Flag Festival ,
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது