×

மனைவி இறந்த துக்கத்தில் மாயமான முதியவர் விபத்தில் சாவு

திருபுவனை, ஜன. 19:  புதுவை உருளையன்பேட்டை தென்னஞ்சாலை ரோடு பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (68). இவரது மனைவி வைரம் உடல்நலக்குறைவால் கடந்த 50 நாட்களுக்கு முன்பு இறந்தார். மனைவி இறந்த துக்கத்தில் ராமலிங்கம் இருந்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் தங்கை சுமதியின் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமலிங்கம் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை, கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராமலிங்கம் இறந்து கிடந்தார். தகவலறிந்த கண்டமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...