புதுச்சேரி, ஜன. 19: புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே கடந்த 13ம் தேதி இரவு ஒரு கும்பல் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐக்கள் கீர்த்தி, ஜாகீர்உசேன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பியோடிது. இதில் 7 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி அன்பு ரஜினி கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி சோழனை தீர்த்துக்கட்டுவதற்காக அன்பு ரஜினியின் தம்பி ஜெரிக்கோ தூண்டுதலின்பேரில் சதி செயலில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களை கைப்பற்றினர்.