திண்டிவனம், ஜன. 19: திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக ஆய்வாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் ஆனந்த் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் டிகேபி.ரமேஷ் வரவேற்றார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.