×

மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணி

ஆட்டையாம்பட்டி, ஜன.19: வலிமையான பாரதத்தை வலியுறுத்தி ஆட்டையாம்பட்டியில் சைக்கிள் பேரணி நடந்தது. மத்திய அரசின் திட்டமான வலிமையான பாரதம் உருவாக்கும் திட்டத்தின் படி ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள சென்னகிரி கிராம பஞ்சாயத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சென்னகிரி நேரு யுவகேந்திரா நற்பணி மன்றத்துடன் இணைந்து சைக்கிள் பேரணி நடத்தினர். பேரணி சென்னகிரி, பாப்பாரப்பட்டி , ஆட்டையாம்பட்டி, எஸ்.பாலம் வழியாக மீண்டும் சென்னகிரி வந்தடைந்தது. இப்பேரணியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் வலிமையான பாரதத்திற்கு தேவையான உடற்பயிற்சி சைக்கிள் பேரணி கீழ் முக்கியத்துவம் குறித்து பாததைகள் எடுத்துச்சென்றனர்.

Tags : Student ,students bicycle rally ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...