நாமக்கல், ஜன.19: நாமக்கல் மாவட்டத்தில், திருவள்ளுவர் தினத்தன்று தடையை மீறி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 636 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவள்ளுவர் தினமான கடந்த 16ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் செயல்படும் பார்களுக்கு, விடுமுறை அறிக்கப்பட்டிருந்தது. மேலும் மது விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. மாவடடம் முழுவதுமாக மதுவிலக்கு போலீசார் அன்றைய தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்துக்கடை, சந்தை, பேருந்து நிலையம், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், அவர்களிடம் இருந்து 636 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.