சாலை பாதுகாப்பு வாரவிழா

லால்குடி, ஜன.19: லால்குடி சிறுதையூர் ரவுண்டானா பகுதியில் லால்குடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகள், கார், பஸ், லாரி டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஒருவழிப்பாதை உள்ள இடங்களில் ஒருவழிப்பாதையை கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியும் வாகனங்களை ஓட்டக்ககூடாது. விபத்துக்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சோலைமுருகன் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்.

Related Stories: