×

விவசாயிகள் கவலை திருத்துறைப்பூண்டி கோயிலில் பொங்கல் விழா போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருத்துறைப்பூண்டி, ஜன. 19: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் நிர்வாகம் மற்றும் சர்வாலய உழவாரப் பணிக்குழு சார்பில் பொங்கல் விழா போட்டிகள் நடைபெற்றது. இதில் உணவுத் திருவிழா, பேச்சு, ஓவியம் ,பாட்டு, பொது அறிவு, வினாடி வினா, உறியடி, கோலம், இசை நாற்காலி, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், ஆடை அலங்காரப்போட்டி உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தபட்டது. ,இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கோயில் செயல் அலுவலர் ராஜா, சர்வாலய உழவாரப்பணிக்குழு தலைவர் டாக்டர் ராஜா, செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசு வழங்கினா்.. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் 400 பேர் கலந்து கொண்டனர். பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchirapuram Temple ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்