×

கலெக்டர் தகவல் குடந்தையில் குடிபோதையில் 2 பேர் தகராறு மர்ம உறுப்பை கடித்த வாலிபர்

கும்பகோணம், ஜன. 19: கும்பகோணம் ஆட்டோ நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் செல்வக்குமார்(29). கூலிதொழிலாளியான இவரும், இதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் ஆரோக்கியசாமி (40) என்பவரும் நேற்று முன் தினம் அதே பகுதியில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆரோக்கியசாமி செல்வக்குமாரை குனிய வைத்து அடித்து கொண்டிருந்த போது, அடி தாங்க முடியாமல், ஆரோக்கியசாமியின் மர்ம உறுப்பை செல்வக்குமார் கடித்தார். இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியசாமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்