குடந்தையில் பரிதாபம் கணவர் அடித்ததால் மனைவி தற்கொலை

கும்பகோணம், ஜன. 19: கும்பகோணத்தை அடுத்த செம்மங்குடி கீழ தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சஞ்சய்காந்தி தினந்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பொங்கலன்று குடித்து விட்டு வந்ததால் அவரை வினோதா கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சஞ்சய்காந்தி மனைவியை அடித்துள்ளார்.இதனால் மனவேதனையடைந்த வினோதா நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தொங்கினார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து நாச்சியார் கோயில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Related Stories: