×

தஞ்சையில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

தஞ்சை, ஜன. 19:தஞ்சை சாந்தபிள்ளைகேட் சாலையோரத்தில் நேற்று காலை ஆண் சடலம் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் சடலமாக கிடந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும் என தெரிய வந்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...