×

பெட்டி கடை தீவிபத்தில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பலி

ஜெயங்கொண்டம், ஜன.19:ஜெயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளே இருந்த குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (36) இவர் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது கடையில் சாமிக்கு விளக்கேற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கடையில் தீ மளமளவென பரவியது. இதில் உள்ளே விளையாடிக்கொண்டிருந்த அவரது இரண்டரை வயது மகன் சகாப்தியன் உடல் முழுவதும் தீ பற்றி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...