×

தரங்கம்பாடி அருகே ஒற்றுமையை வலியுறுத்தி வாலிபர்கள் சுடர்ஓட்டம்

தரங்கம்பாடி, ஜன.19: தரங்கம்பாடி அருகே மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி தென்னக வாலிபர் சங்கத்தின் சார்பில் சுடர்ஓட்டம் நடைபெற்றது. திருவிளையாட்டம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 24ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கிளை தலைவர் அறிவரசன் தலைமையில் நடந்தது. இதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை சீரழிக்காதே என வலியுறுத்தியும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் சுடர்ஓட்டம் சிவன் கோவில் பகுதியில் இருந்து துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சீனிவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்ற நிறுவனர் மாயாவெங்கடேசன் முன்னிலை வகித்தார். சுடர்ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழா நடைபெறும் இடத்திற்கு வந்தது. அங்கு வாலிபர் சங்க வட்ட செயலாளர் மார்க்ஸ் சுடர்ஓட்டத்தை முடித்து வைத்து சங்க கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு நடைபெற்றன. மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், தலைவர் சரவணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். கிளை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags : Plaintiffs ,Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...