×

பள்ளம் தோண்டி மணல் திருட்டு தடுத்து நிறுத்தம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி

வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி சென்னை சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் கலைஞர் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கவுதமன், தலைஞாயிறு பேருர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன் ஒன்றிய கவுன்சிலர்கள், முத்துலெட்சுமி, பிரகாஷ், செல்விசேவியர், மாசிலாமணி, உதயகுமார், ஒன்றிய செயலாளர் மகாகுமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், வர்த்தக சங்க செயலாளர் முருகானந்தம், மாணவரணி பார்த்திபன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி மற்றும் ஒன்றிய, பேருர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...