×

வேதாரண்யம் அருகே பணிக்கு சென்று திரும்பிய போலீசாரை வழிமறித்து தாக்கு

வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (30). இவர் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு பணி முடிந்து இரவு 11 மணியளவில் சீருடையில் டூவீலரில் அகஸ்தியன்பள்ளிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது புஷ்பவனம் சர்வோதயபுரம் ரமேஷ் மற்றும் தினேஷ், முனிஷ், அஜித்குமார் உள்ளிட்ட சிலர் காவலர் முருகையன் வந்த வாகனத்தை மறித்து திட்டி தாக்கினர். பாதிக்கப்பட்ட காவலர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கியவர்களை தேடி வருகிறார்கள்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்