×

வாடகை வசூலிக்க சென்ற பெண்ணை தாக்கிய கடைக்காரர் கைது

வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யத்தை சேர்ந்த சண்முகம் இவரது மனைவி தேவிகா (38). இவருக்கு சொந்தமான கடையில் வேதாரண்யத்தை சேர்ந்த கண்ணன் (52) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். நேற்று வாடகை வசூல் செய்ய சென்ற தேவிகாவிற்கும் வாடகைக்கு கடை வைத்திருக்கும் கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தேவிகாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவிகா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...