×

கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்றவருக்கு அடிஉதை

மயிலாடுதுறை, ஜன.19: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அன்பநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(46), குடும்ப சண்டை காரணமாக ஜெய்சங்கர் மனைவி கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீடான அன்பநாதபுரம் கீழத்தெருவில் உள்ள அன்பழகன் மகன் இளையராஜா வீட்டிற்கு சென்றார். இதைக் கேள்விப்பட்ட ஜெய்சங்கர் இளையராஜா வீட்டிற்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். வர மறுத்ததால் கட்டாயப்படுத்தி அழைத்தபோது இளையராஜாவுக்கும் ஜெய்சங்கருக்கும் வாக்குவாதம் முற்றியது. இளையராஜாவும் காசிநாதன் மகன் பாரதிராஜா(38) என்பவரும் ஜெய்சங்கரை தாக்கினர். காயமடைந்த ஜெய்சங்கர் மயிலாடுதுறை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...