வேலூர், ஜன.19:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே, ‘வலிமையான மக்களாட்சி, தேர்தல் கல்வி அறிவு’ என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.